மண்டபம் அருகே 40 கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 4 பேர் கைது
ராமநாதபுரம், மே. 28:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் போலீசாருக்கு சுந்தரமுடைமாள் பஸ் நிலையத்தில் ரகசியமாக கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 2 பெண்கள் உள்பட 4 பேர் பைகளுடன் நின்று கொண்டு இருந்தனர்.

போலீசார் பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.