Welcome PradhiKarthik: குருப்பெயர்ச்சி பலன்கள் : மீன ராசி

Wednesday, May 29, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் : மீன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் : மீன ராசி

மீனம்: 

(பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வல்லமை படைத்த மீன ராசி அன்பர்களே! குருபகவான் இதுவரை உங்களுக்கு ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலை கூட ஏற்பட்டு இருக்கலாம். உங்கள் நிலையில் இருந்து மாற்றம் கண்டு இருப்பீர்கள். மற்ற கிரகங்களும் சாதகமற்ற நிலையில் இருந்ததால் பிரச்சினைகள் அதிகமாகவே இருந்து இருக்கலாம். இந்த நிலையில் குருபகவான் 3-ம் இடத்தில் இருந்து 4-ம் இடத்துக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும்போது மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால், குருபகவான் உங்கள் ராசி நாயகனாக இருப்பதால் உங்களுக்கு கெடுபலன்களை செய்ய மாட்டார். அதோடு அவரால் முயன்ற நன்மைகளைத் தான் செய்வார் அப்படியே சில சோதளைகளை கொடுத்தாலும் அது உங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செய்வார். ஒரு மாணவனுக்கு ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பது போல குரு உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார். உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார்.

                          முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம்.

                            ஏனெனில் 4-3-2014 முதல் 19-7-2014 வரை சனிபகவானும், 14-11-2013 முதல் 12-3-2014 வரை குருபகவானும் வக்கிரம் அடைகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் அவர்கள் கெடுபலனை தராமல் நன்மைகளே செய்வார்கள். பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் வரும். குரு வக்கிரம் ஒரு கிரகம் வக்கிரம் அடையும் போது அந்த கிரகத்தால் இயல்பாக செயல்பட முடியாது. உங்களை பொறுத்தவரை குருபகவான் சாதகமாக காணப்படவில்லை. அவர் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார்.

                          2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். ஆனாலும் இந்த வக்கிர காலத்தில் குருவின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகம் சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும். குடும்பத்தில் தேவையான வசதிகள் இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடை படலாம். அதுவும் நல்லதுக்குத்தான். தாமதமாகும் திருமணம் நல்லதாக அமையும். புதிய வீடு வாகனம் வாங்க உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனாலும், அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. உங்கள் வேலையை பிறரிடம் கொடுக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. மேல்அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு இருக்கும். சற்று முயற்சி எடுத்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.


                                புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காது ராகு தற்போது 8-ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்து காணப்படுகிறார். அது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கும் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். கேது 2-ம் இடமான மேஷத்தில் நின்று பொருள் விரையத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தருவார். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரன நிலையில் இருப்பர். மாணவர்கள் இந்த ஆண்டு சுமாரான பலனையே காணலாம். அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. பெண்கள் சீரான நிலையில் இருப்பர். ஆடம்பரத்தை தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். வெளியூர் பயணத்தை ஏற்படுத்தலாம். 2013அக்டோபர்: மாதத்திற்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். நிலம், வீட்டுமனை போன்றவை வாங்க அனுகூலம் பிறக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். சனிபகவான் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக காணப்படவில்லை. அவர் தற்போது வக்கிரத்தில் உள்ளார்.

                                  அவர் 6-7-2013 வரையிலும் வக்கிரத்தில் இருப்பார். இதனை அடுத்து 4-3-2014 முதல் 19-7-2014 வரையிலும் சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் தொழில் சிறப்படையும். குறிப்பாக இரும்பு தொடர்பான தொழில் சிறந்தோங்கும். எதிரிகளை சமாளிக்கும் திறன் மேம்படும். வக்கீல், தரகு போன்ற தொழில் நன்றாக இருக்கும்.

 பரிகாரம்:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும். சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஆதரவற்ற முதாட்டிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் ஏழைகளுக்கு ஆடு வளர்க்க உதவி செய்யலாம்.